உடுப்பிட்டி மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால், சுயதொழில் முயற்சியாளர்களுக்கான Saree Pleating and Ironing பயிற்சி 23.07.2026( வியாழக்கிழமை )அன்று உடுப்பிட்டி தையல் நிலையத்தில் நடாத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வளவாளராகக் கலந்துகொண்ட திருமதி. ஜெலாசன் தமிழினி அவர்கள் வழங்கினார்.
சிறுதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் தொழில்முனைவுத் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் இப் பயிற்சி நெறி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













