"அகன்று செல்" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட நிகழ்வுகள் 10.03.2026 (செவ்வாய்க்கிழமை ) அன்று மாலை 3.00 மணியளவில் கரவெட்டி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த விழிப்புணர்வு செயற்திட்டமானது J/357 சமரபாகு கிராமத்திலும், அதனைத் தொடர்ந்து J/363 இராஜகிராமத்திலும் சிறப்பாக இடம்பெற்றது.இதன்போது "செம்முகம்" நாடகக் குழுவினரால் போதைப்பொருளின் அபாயங்கள் மற்றும் அதனால் குடும்ப வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையிலான வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டதோடு போதைப்பொருள் பாவனையில் இருந்து இளைய சமுதாயத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்வு ப்ரெண்ட்ஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது














