முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 18.07.2025 ஆம் திகதியன்று கரவெட்டி பிரதேச செயலாளர் தலைமையில் கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வளவாளர்களாக R.அமலன் (மாவட்ட முன்பிள்ளைபருவ இணைப்பாளர்) ,K.சத்தியசீலன் (முன்பள்ளி வலயக்கல்வி பணிப்பாளர்). R.றொபின்சன் (பயிற்சியாளர் CCH நிறுவனம்) ஆகியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.













