கரவெட்டி பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கும், கௌரவிப்பு நிகழ்வும் வெள்ளிக்கிழமை (22.05.2026) பிற்பகல் 2:30 மணியளவில் கரவெட்டி பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திருமதி. உமாமகள் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
​​இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள கணக்காளர் திரு. இரட்ணம் முருகதாஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக நெல்லியடி வர்த்தக சங்கத்தின் செயலாளர் திரு. இராஜதுரை பிரதீப் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

​​இக்கருத்தரங்கில் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், சமூகத்தை அதிலிருந்து பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்கள் பகிரப்பட்டதோடு ​இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, கடந்த 2025ஆம் ஆண்டு போதை ஒழிப்புக்கான நிதி சேகரிப்பில் பங்களிப்பு வழங்கி, மிகக் கூடிய நிதியைச் சேகரித்த சங்கங்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

25drug7 25drug1 25drug2

25drug4 25drug5 25drug6

குடியுரிமை சாசனம்

Scroll To Top