77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்றையதினம் (04.02.2025) கரவெட்டி பிரதேச செயலக முன்றலில் "தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்" என்ற கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு பிரதேச செயலாளர் திரு. ஈ.தயாரூபன் அவர்கள் தலைமையில் தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களால் சுதந்திர தின உரை நிகழ்த்தப்பட்டு உத்தியோகத்தர்களால் செயலக வளாகம் சிரமதானம் செய்யப்பட்டது.













