இலங்கை இராணுவத்தின் தலைமையில் நாடு முழுவதும் 253 கடற்கரைப் பகுதிகளில் “சுத்தமான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்” என்ற கருப்பொருளின் கீழ் கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் தேசிய நிகழ்வு 23.05.2026 அன்று காலை 7:00 மணிக்கு வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
"Clean srilanka" அரச திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.​இந் நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக பருத்தித்துறை கற்கோவள கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு இன்று காலை ஆரம்பித்தோடு இந் நிகழ்வின் தூய்மைப் பணியில் சமூகப் பொறுப்புணர்வுடன் ​கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,​பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,​சமூக அமைப்புகள், கடற்கரைதொழிற்சங்கங்கள்,​சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்​அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பான பங்களிப்புடன் கற்கோவள கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்வினை வெற்றிகரமாக முடிவுறுத்தினர்.​நமது கடற்கரைகளைப் பாதுகாப்போம்! சுற்றுலாவை மேம்படுத்துவோம்! தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்

 23Cleansrilanka1 23Cleansrilanka2 23Cleansrilanka3

23Cleansrilanka4 23Cleansrilanka5 23Cleansrilanka6

 
Scroll To Top