Clean Sri Lanka திட்டத்தின் கீழ் கிராமத்தில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பயன்பாட்டினை கட்டுபடுத்தல் பற்றிய சிறுவர்களுக்கான முகாம் 12.11.2025 அன்று அல்வாய் கிழக்கு பிரிவில் நடைபெற்றது.இவ் செயற்பாட்டில் N.ஜெனோபா(சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) அவர்களும் R.நிமாலினி(இணைப்பாளர்,ப்ரண்ட்ஸ் நிறுவனம்) அவர்களும் K.கதிர்செல்வன் (சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்) அவர்களும் கலந்து கொண்டு சிறுவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வழங்கினார்கள். இவ் நிகழ்ச்சி திட்டத்திற்கு அனுசரணை, ஒழுங்கமைப்பு ப்ரண்ட்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.













